Monday, March 1, 2010

மொக்கை கவிதைகள்..

மொக்கை கவிதைகள்..
---------------------------------------
1 . என்னுடைய முகப்பருவை பார்த்து "அழகா இருக்கே" என்று சொல்லி நக்கல் அடித்த என்னுடைய நண்பருக்காக எழுதியது இந்த கவிதை..

முகப்பரு
நண்பா …
அழகென்று  ரசித்ததும்  இல்லை …
அசிங்கமென்று  வருந்தியதும்  இல்லை ..

எத்தனை  விசித்ரமானது  இந்த  முகப்பரு ..
என்  முகத்தையும்  அழகாக்கி  விட்டதே !
எத்தனை  முறை  வந்து  சென்றிருக்கும்  …
அப்போது  ரசிக்காத  எனக்கு 

இப்போது  ரசிக  தோன்றியதே  …

எதற்காக ?

முகப்பருவும்  அழகு  என்று  …
அறிய  வைத்தவன்   நீ  தானே !


 =======================================

2 .என்னுடன் வேலை செய்யும் தோழி சுஜாதா ஒரு நாள் ஏதோ ஒரு சின்ன விஷயத்துக்காக கோபித்து கொண்ட போது எழுதிய கவிதை இது..

சுஜாதா’வின்  மௌனம் :
 அளவில்லாமல்   நீ  பேசியதை  ரசித்த  எனக்கு 
 உன்னுடைய  மௌனத்தை  ரசிக்க  முடிய  வில்லை ..

ஏனடி ,

ஏன்  இந்த  மௌனம் ..?
என்ன  பெரிதாய்  சாதித்திருகிறது  உன்  மௌனம் ?

உண்மையோ  !
பொய்யோ  !
ரசிப்பேன்
நீ  பேசினால் ..............

நட்பு
அறிமுகம்  இல்லாமல்  வந்தோம் …
அடிகடி  சந்தித்து  கொண்டோம் …
உறவுகளுக்கு  மேலே  உயிர்  ஆனோம்  
காலங்கள்  கடந்து  சென்றாலும் 
கடைசிவரை  தொடர  வேண்டும் 
நம்  நட்பு …

======================================
3 . அருள்சிங்க் வேலையை விட்டு சென்ற போது எழுதியது..

பிரியா  விடை …
எங்கிருந்தோ  வந்தோம் ...
எப்படியோ  சந்திதோம் …
தலைஎழுத்து என்று  எண்ணிக்கொண்டே ...
நண்பர்களாக  ஆனோம் ..
அடிகடி  சந்தித்து  கொண்டோம் …
வேலையை  தவிர  மற்ற 
தேவைற்ற  வேலைகளை செய்தோம் ..
மற்றவர்களை  கலாய்த்து  கொண்டே  காலங்கள்  கழித்தோம் ..
பிரியும்  நேரம்  வந்துவிட்டது ...
பிரிய  மனம்  இல்லை ..
காலங்கள்  கடந்து  சென்றாலும் 
கடைசிவரை  தொடர  வேண்டும் 
நம்  நட்பு …

No comments:

Post a Comment