Sunday, March 28, 2010

பொது மனிதர்களின் செயல்களால் ஏற்படும் எதிர்மறை தாக்கம்!

இன்று  பேருந்தில் இரண்டு  இளைஞர்கள் பேசிக் கொண்டது.. 

டேய் மச்சான் நான் பிசினஸ் ஆரம்பிக்கலாம்ன்னு  இருக்கேன் டா...கம்பனிக்காக நாயா உழைக்கிறோம் ஆனா எந்த நாயும் நம்மள மதிக்க மாட்டேங்குது..
(நாய் என்னைக்கு உழைச்சிருக்கு  சும்மா தானே வாலு ஆட்டிக்கிட்டு இருக்கும்...இந்த சந்தேகம் ரொம்ப  நாளா  இருக்கு...யாராச்சும் தெரிஞ்சா சொல்லுங்கப்பா )

பைனான்சு  கம்பெனி ஒன்னு ஆரம்பிக்கலாம்ன்னு  நினைக்கிறன் டா..முதலீடு எங்க மாமா குடுக்கறேன்னு சொல்லி இருக்காரு.

டேய் மாப்பு அதெல்லாம் வேணாம் டா இப்போ இருக்கற லேட்டஸ்ட் trend ஆசிரமம்  தாண்டா.....தனி  பங்களா , நல்ல சாப்பாடு, சொகுசான வாழக்கை,அது மட்டும் இல்லாம சூப்பர் பிகரு  எல்லாம்  நம்மை  தேடி  வரும் மாப்பு...நமக்கு  காலு  அமுக்கி  விடுவாங்க :))) சிம்பிலா  ஏதாவது  ஒரு  சாமி  பேரு  சொல்லிட்டு  ஜல்சாவா  வாழ்க்கை  நடத்தரத விட்டுட்டு  பைனான்சு கம்பெனி  அது  இதுன்னு  சொல்லிட்டு பொழக்க  தெரியாதவனா இருக்கியே டா  நீ ..
டேய்  மாப்பு  நம்ம  ஆசிரமம் தொடங்கினா முதல்ல புல்லா  centralised  a/c போடணும்  மாப்பு  இல்லைனா ...'கதவை  திற  காற்று  வரட்டும்'  பதிலா  ...sun tv  காரன் கேமரா வந்துடும் .

டேய்  மச்சான் ஒரு சந்தேகம் டா..எப்புடி  டா  அவளோ  ஞான திருஷ்டி இருக்கற  அவனுங்களுக்கே    தெரியாமே  video எடுப்பானுங்க...
அதான்  மாப்பு அந்த வீடியோ எடுத்த ரெண்டு நாளும் அவரு ஞான திருஷ்டிக்கு பேட்டரி வீக்கா போயிடுச்சாம்  ...அதனால சுவிட்ச் ஆப் பண்ணி வச்சிருந்தானாம்...அந்த நேரம் பாத்து சன் tv காரன்  பூந்துட்டான் .
என்ன டா மச்சான் இது... ஏதோ செல்போனுக்கு சார்ச் இல்லைன்னு சொல்ற மாதிரி சொல்ற!

(இது வரை போதும் இதற்கு மேல் அவர்கள் பேசியதை இங்கு பதுவு செய்ய விருமபவில்லை )

இன்றைக்கு நம் சமுதாயத்தில் காணப்படும் பல பிரச்சினைகளுக்கு நடுவில் இப்போது தலையோங்கி ஆடுவது இந்த சாமியார்கள் பிரச்சனை. இந்த பிரச்சனைகள் நம் இளைஞர் சமுதாயம்  மத்தியில்  ஒரு எதிர்மறை  தாக்கம் (Negative Impact) உண்டாக்கி  கொண்டிருக்கின்றது என்பது  தான் உண்மை. கல்கி ஆசிரமத்தில் தரப்படும் பிரசாதத்தில் ஏதோ ஒரு மயக்க மருந்து இருக்கிறது. அதை வைத்து எங்களது பிள்ளைகளை கடத்துகிறார்கள் என்று பல பெற்றோர்கள் புகார் செய்வதாக செய்திகள் படித்தேன். பல ஆசைகளோடும் கனவுகளோடும்  தங்களின் பிள்ளைகளை படிக்க வைத்து  ஆளாக்கும் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகள் இப்படி இந்த ஆன்மிக பிரச்சனைகளில் சிக்கி  நிலை தடுமாறுவதை கண்டு  மனம் வேதனை அடைகின்றனர். 


இளைஞர்களின் மனதில், சாமியார்களின்  வசதி வாழ்க்கையைப் பார்த்தே பலருக்கு சாமியார் ஆகும் ஆசை வந்திருக்க வேண்டும் என்ற ஐயம் எனக்கு இருக்கிறது. வியர்வை சிந்தி உழைக்காமலேயே வேளாவேளைக்கு அறுசுவை உணவு, கால் கை பிடிச்சு விட பக்தகைகள், என அனைத்தும் உழைக்காமலேயே.. ஏதோ  ஒரு  கடவுள்  பெயரை  சொல்லிக்கொண்டு  காலத்தை கழிக்கலாம் என்று நினைக்கிறார்களோ என்ற பயம் கலந்த வேதனை கூட சில சமயங்களில் வருவதுண்டு.
இப்படி போனால் நம் அப்துல் கலாம் கண்ட கனவு  எப்படி நிறைவேறும்? நம் நாடு எப்படி வல்லரசு ஆகும்?.

**இளைஞர்களே நீங்கள் தான் நம் சமுதாயத்தின் முதுகெலும்பு என்பதை  மறவாதீர்கள், இப்படி பட்ட சில பிரச்சனைகளில் நீங்கள் சிக்கி கொள்ளாமல் உங்களின் இலக்குகளை நோக்கி  பயணம் செய்யுங்கள்.....


கடவுளை  தேடி ..
வருத்தமாக இருக்கிறது, என்னுடைய பதிவில் இந்த செய்தியை பற்றி எழுதுவது.. தற்போது  எல்லா பத்திரிகைகளும், தொலைகாட்சிகளிலும் , மற்றும் பதிவுலகமே எழுதிக்  கொண்டிருக்கும் சூடான செய்தி பரமஹம்ஸ நித்யானந்தர் மற்றும் அம்மா(கல்கி) பகவான் பற்றி தான்.
இந்த இரண்டு செய்திகளும்  நிறைய மாறுபட்ட கருத்துக்களை மட்டும் அல்லாமல் இத்தனகாலமாக இவர்களை நம்பிபொதுமக்களமத்தியிலபெரும் அ‌தி‌ர்‌ச்‌சியையு‌ம், கொந்தளிப்பையு‌ம் ஏற்படுத்தியுள்ளது.
அதான்  நிறையப் பேர் வீடியோவே போட்டிட்டாங்களே.. நான் வேற என் வலைப்பதிவை அசிங்கப் படுத்தணுமா? என்று இதை பற்றி இங்கே எழுதாமல் இருந்தேன் ஆனால் பேருந்தில் நடந்த சம்பவத்தை பார்த்து, இந்த விஷயத்தில் நமது தரப்புக் கருத்தைச் சொல்லாவிட்டால் நாளை நம் நாட்டில் எந்த பிரச்சனை பற்றியும் பேசுவதற்கு உரிமை இல்லாமல் போய்விட வாய்ப்பு உண்டு என்ற காரணத்தால் விருப்பமே இல்லாமல் மனவேதனையுடன் எழுதியது தான் இந்தப் பதிவு.

சன் டிவி'யில் இந்த செய்தி வெளயிட்டபோது ஏன் நடிகையின் முகத்தை மட்டும் மறைத்தார்கள்?.காரணம்... விளம்பரம். “சாமியார் நித்தியானந்தருடன் இருந்த நடிகை யார்” – 7 மணி செய்திகளில் என்று விளம்பரம் தேடிக் கொண்டார்கள். பாலியல் காட்சிகளை பகிரங்கமாக வெளியிட்டு தங்களை நீதிமான்களாக காட்டிக்கொண்ட தொலைக்காட்சியை என்னவென்று  சொல்லுவது .

இதில் நகைச்சுவை என்னவென்றால்..அந்த நடிகையின் பெயர் "ர"'வில் தொடங்கும் என்பதை மட்டும் சொல்லியது தான். அப்பொழுது  மக்கள் மத்தியில் நிலவி கொண்டிருந்த  குழப்பமே நித்தியானந்த சுவாமிகளின் லீலைகள் பற்றி அல்ல..யாரு அந்த நடிகை என்பது தான். நம்ம மக்கள் திருந்தவே மாட்டாங்களா?. இன்று தமிழ்நாட்டின் மூளை முடுக்கு என்று எல்லா இடங்களிலும் இதே பிரச்சனை தான் , டீக்கடையில் இருந்து பெட்ரோல் பங்க்வரையிலும் அனைவரின் முகத்திலும் ஒரு நக்கல் சிரிப்பு, அடுத்தவர்களின் அந்தரங்கம் மீது நமக்கு  எவ்வளவு ஆர்வம் இருக்கிறது பாருங்கள்.


......முடிவில் இத்தகைய பொது மனிதர்கள் இந்த மாதிரியான சர்ச்சைகளில் ஈடுபடுவது தவிர்க்கலாம் என்பது தான் என்னுடைய கருத்து.
கடவுள்  'உண்டு'  'இல்லை' என்பதை நான்  வாதிக்க  விரும்பவில்லை , ஆனால்  இந்து சமயத்தின்படி வளர்க்கப்பட்டவள்  நான், அப்படி  இருக்க  இந்த சாமியார்கள் இப்படியான சில சர்ச்சைகளில் ஈடுப்பட்டு அகப்படும்போதேல்லாம் இந்து சமயத்தை இவர்கள் கேவலப்படுத்துவதாக மனம்  மிகவும்  சங்கடம்  அடைகின்றது .

யாரை குற்றம் சொல்வது ஏமாற்றுபவர்களையா ஏமாறுபவர்களை
யா?..நம் மக்களுக்கு எத்தனையோ பிரச்சினைகள் அதற்க்கு தீர்வு காண கோயிலுக்கு போகிறார்கள், மனதில் இருக்கும் சுமையை இறைவனிடம் இறக்கிவைத்து வந்தால் மனம் லேசாகும் என்ற நமிக்கையில். ஆனால் பிரச்சனை என்னவென்றால் நம் மக்கள் கடவுளை நம்புவதை விட கடவுள் பெயரை சொல்லி ஏமாற்றுபவர்களை அதிகமாக நம்புகிறார்கள்.

இதைதான் விவேகானந்தர் சொன்னார் ,கடவுளை எங்கும் தேட வேண்டாம் அவர் நம்முள் தான் இருக்கிறார் என்று.


கீதை,குரான்,பைபிள்,எல்லாவற்றிலும் சொல்லப்படுவது இது தான்..
கடவுளை நம்பு! உன்னுள் இருக்கும் கடவுளை நம்பு!
மனதாலும் பிறருக்குத் தீங்கு செய்யாதவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கு நீங்களே கடவுள்.

Thursday, March 11, 2010

அய்யோ படிக்காதீங்க!

ஏனுங்க சொன்னா கேக்க மாடீங்களாக்கும் ..அதான்  மேல  கொட்டை  எழுத்துல போட்டிருகோம் இல்ல படிகாதீங்கன்னு..அப்புறம்  என்ன  மொறச்சு  மொறச்சு  பாத்துகிட்டு  கெளம்ப வேண்டியது தானே ...

வேணாம்னு சொன்னா அதையே செய்யுவேன்னு  அடம் புடிச்சுகிட்டு ...சின்ன  புள்ள  தனமா  இல்ல இருக்கு.  ஒரு சப்ப மட்டேர்தாங்க எழுதிருக்கேன் வேற ஒன்னும் இல்லீங்க அத நீங்க படிச்சு உங்க நேரத்த வீணாக்க வேணாம்..

ப்ளீஸ் இதை படிக்காதீங்க  -  நான்  மறுபடியும்  உங்கள  அலெர்ட்  பண்றேன். சொன்னா சொன்ன பேச்சு கேக்கணும் ...அத விட்டுட்டு  சும்மா படிக்காதிங்கன்னா வந்து படிச்சிகிட்டு ..

ஆபீசெளையும்  சரி ..ப்ரேன்ட்ஸ்  கிட்டயும் சரி... எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன் வேண்டாம்  இத படிக்காதீங்கன்னு அவங்களும்  கேக்கல படிச்சே தீருவேன்னு முரண்டு பிடிச்சு படிச்சுட்டு போய் அவன் அவன் மண்டைய பிச்சிக்கிட்டு உக்காந்திருக்கான்...இது எல்லாம் தேவையா உங்களுக்கு..

இப்போவாச்சும் நான் சொல்றத கேளுங்க...risk  எடுக்காதீங்க...risk எடுக்கறது  rusk சாபிடறமாதிரி ' ன்ற  கூட்டத்த சேர்ந்தவங்களா இருந்தா...உங்களோட  சொந்த  ரிஸ்க்ல  உள்ள வந்துக்கலாம்...பாதிப்புகளுக்கு  நான்  காரணம் கிடையாது சொல்லிட்டேன்.

பரவால்லையே இன்னும் படிச்சிட்டு இருக்கீங்களே...உங்க தைரியத்தை நான் பாராட்டறேன்.

பெருசா ஒன்னும் இல்லைனாலும்..என்னக்கு ஒரு சந்தேகம்ங்க ..
அது வந்துங்க..

நிலவைப் பாருங்கள்.... கடவுளின் அழகு தெரியும்,

சூரியனைப் பாருங்கள்... கடவுளின் சக்தி புரியும்,

கண்ணாடியைப் பாருங்கள்.... கடவுளின் காமெடி புரியும்'ன்னு


சொல்றாங்களே...இதுக்கு என்ன அர்த்தம்.

இப்போ  ஏன்  மொரைகிறீங்க ...சரி  சரி ..no tension...

நான் தான் சொனேன் இல்ல, நீங்க தான் கேக்கல....அதான்  இப்போ படிச்சிட்டு  ஒன்னும்  இல்லன்னு  தெரிஞ்சுகிட்டீங்க  இல்ல,  இப்போவாச்சும்  கிளம்பலாம்  இல்ல ...

அட சத்தியமா  கீழ  ஒன்னும்  இல்லீங்க ...

சரி  வந்தது  வந்துடீங்க ...என்னோட அடுத்த கேள்விக்கும் பதில் சொல்லிட்டு போய்டுங்க.

"நீங்க செய்யக் கூடாதுன்னு சொன்னா அதை செய்யணுமுன்னு ஏன் தோணுது...? படிக்காதீங்கண்ணு சொன்னா ஏன் உங்களுக்கு படிச்சே ஆகணும்ன்னு  தோணுது?..."

என்னங்க தேடிறீங்க...கொம்புங்களா?...

ஐயையோ..

இந்தா... கெளம்பிட்டேன்...போய்டேன்...போயிட்டேன்..

excuse me..

மொறைக்காதீங்க... கிளம்பறதுக்கு முன்னாடி  ஒரு சின்ன request...

சரி  இம்புட்டு நேரம்  படிச்சிங்களே அப்படி  என்னதாங்க தெரிஞ்சிகிடீங்க?..சொல்லுங்க நானும் தெரிஞ்சிக்கிறேன்.

ஓகே ரைட் ..போதும்  இத்தோட  பூராத்தையும்  நிறுத்திப்போம் ..

வர்ட்டா..

Monday, March 8, 2010

பைக் ஓட்டும் ஆசாமிகளுக்கு!!!

அசாரசமா யாரோட பைக்கிலும் அவளோ சீக்ரம் ஏறமாட்டேன்... பைக்'ன்னா கொஞ்சம் பயம் எனக்கு. அலுவலகத்துல இருந்து கிளம்பர நேரத்துல..ஆனந்த் (எங்க ஆபீஸ்ல வெப் டிசைனரா வேலை செய்றான்) "மேடம் வாங்க நான் ட்ரோப் பண்றேன்....நானும் உங்க ஏரியா பக்கம் தான் போறேன்" என்று சொல்லி அழைத்தான்.

கொஞ்சம் தயங்கினேன். நான் தயங்கிக்கிட்டு இருந்ததை பார்த்த அவன் "மேடம் பயப்படாம வாங்க பத்திரமா  கொண்டு போய் சேக்கிறேன்"ன்னு அசால்ட்டா சொன்னான்.

சரி பைக்ல போனா சீக்கரமா போய்டலாமேன்னு ஆசைப்பட்டு  அவனோட பைக்ல ஏறிட்டேன். ஏறினது தாங்க தாமிசம், சும்மா பிச்சிகிட்டு போகுது வண்டி. எனக்கு குடல் அப்படியே நடுங்க ஆரம்பிச்சுடுச்சு ..."ஆனந்த் கொஞ்சம் மெதுவா போ பயமா இருக்கு, இல்லைன்னா விட்டுடு நான் பஸ்லயே போறேன்"ன்னு கதரிகிட்டே இருந்த  என்னை "மேடம்...பயப்படாம வாங்க ...எத்தனை நாளா வண்டி ஓட்டிகிட்டு இருக்கோம், சும்மா கில்லி.. கில்லி மாதிரி உங்கள கரெக்டா சேர்க்கவேண்டிய இடத்துல சேர்த்துடறேன்". அவனோட ஸ்பீடும் அலும்பளும் தாங்கல... தெரியாத்தனமா ஏறிட்டோமேன்னு  நொந்துகிட்டு "என்ன கொடுமை சார் இது' ன்னு எனக்கு நானே டயலாக் சொல்லிகிட்டேன்...அந்த நேரத்து
லயும் என்னோட குசும்பு பாருங்க :)

இப்போ ஸ்டோரியோட கிளைமாக்ஸ்க்கு வந்திருக்கோம். பைக் போய்கிட்டே தான் இருந்துச்சு சடன்னா கண்ணு மூடி கண்ணு  திறக்கரதுக்குள்ள நடு ரோட்ல விழுந்து கிடக்கிறேன். எழுந்து பார்த்தா, பைக் பக்கத்துல போயிட்டு இருந்த ஆட்டோ மேல மோதி விழுந்துகிடக்குது...Just Miss இல்லைன்னா எனக்கு  இன்னைக்கு சங்கு தான். யாரு  முகத்துல  முழிச்சேனோ இன்னைக்கு...

பைக்குக்கு  ஏதாச்சும் சேதாரம் ஆச்சான்னு  பாத்துகிட்டு இருந்த ஆனந்த்'யை
"ஆனந்த்  என்ன ஆச்சு."ன்னு கேட்டேன்.
 "சாரி மேடம்...லெப்ட்ல சூப்பர் பிகரு  கிராஸ் ஆச்சா...அதான் பாத்துகிட்டே வண்டிய தெரியாம லேசா  ரைட்டுல விட்டுட்டேன்னு.." சொல்லி முடிச்சான்.
என்னோட ரியாக்சன் எப்படி இருந்திருக்கும்னு யோசிச்சுகோங்க..
"அடப்பாவி...சிவனேனுதனடா  நான் போயிட்டு  இருந்தேன்...என்ன வற்புறுத்தி உன் வண்டில வர சொல்லி...இப்படி பண்ணிட்ட..அப்படி என்னடா சைட் வேண்டி இருக்கு உனக்கு" ன்னு  நொந்துகிட்டு..
வேணும் டி நல்லா வேணும் உனக்கு...இனிமேல் யாரோட பைக்லயாச்சும்  ஏறுவ.."Be careful" ன்னு எனக்கு நானே வடிவேலு ஸ்டைல்ல சொல்லிகிட்டேன்.

மக்களே (especially பைக் ஓட்டும் நண்பர்களே)  உங்களுக்கு அன்பான வேண்டுகோள்:
உங்க பின்சீட்டு காலியா இருந்தா ஜாலியா ஓட்டுங்க வேணாம்னு சொல்லல ..ஆனா என்னை  மாதிரி குடும்ப இஸ்திரி யாராச்சும் உட்கார்ந்திருக்கும் போது லெப்ட்ல பிகர பார்த்தா பைக்கை ஸ்டிரேட்டா ஓட்டாம  ரைட்ல விட்டுடாதீங்க.... எங்கள நம்பி ஒரு பெரிய  கூட்டமே இருக்கு..யோசிச்சுகோங்கோ!

வாழக்கை புத்தகத்தில் நிரப்பப்படாத பக்கம்! - சிறுகதை


 நான் என்னை மறந்த வினாடி அது , அவனை அந்த புத்தக கண்காட்சியில் பார்த்தது. அவனை பார்த்த நொடியே அவனை மிகவும் பிடித்து போனது. வசீகரமான முகம். சின்னதாய் ஒரு புன்னகை. காதல் வயப்படும் அனைவருக்கும் ஏற்படும் அதே உணர்வு என்னையும் தொற்றிக்கொண்டது. இதய துடிப்பு அப்படியே நின்று  போய்விடும் போல் ஒரு உணர்வு.


அவனை நேரடியாக காணும் சக்தியை என் கண்கள் இழந்திருந்தன. அவன் "காமெடி செக்க்ஷனில்"... "தி பெஸ்ட் ஆப்  லாப்பர் " என்ற புத்தகைத்தை புரட்டி கொண்டு லேசாக சிரித்து கொண்டிருந்தான்.
என்ன அழகு அவனோட சிரிப்பு...ரசித்து கொண்டே இருந்தேன் சற்று தொலைவில் இருந்து.

அதிக நேரம் அவனையே பார்த்து கொண்டிருப்பதை அவன் கவனித்து இருப்பான் போல, சட்டேன்று என்னை பார்த்து ஒரு சின்ன புன்னகை வீசினான்....அதிர்ந்து போனேன். நம்ப  முடியவில்லை. இந்த பக்கம் அந்த பக்கம் திரும்பி பார்த்து ...அவன் என்னை பார்த்து தான் சிரித்தானா என்று கன்பார்ம் செய்து கொள்வதற்குள் அவன் திரும்பி விட்டான். இது வரை இருந்த படபடப்பு விடவும் சற்று அதிகமாக இருக்கிறது அவனுடைய சிரிப்பிற்கு பிறகு.

சுதாரித்துகொண்டு அவன் இருந்த செக்சனுக்கு சென்று...ஏதோ ஒரு புத்தகத்தை  எடுத்து புரட்டினேன்.. சற்று நேரம் கழிந்த பின்,
அவன் என்னை பார்த்து ..
"ஹாய்..ஐயம் மகேஷ்" என்றான்.....மகேஷ்..நல்ல பெயர்.
".........ஹாய்..ஐ..ஐ...ஐயம்... சித்ரா.."
"புக்ஸ் வாங்க  வந்தீங்களா? ன்னு  ஒரு அசட்டு கேள்வியை அவன் என்னிடம் கேட்க...நான் புன்னகைத்தேன் ஆமாம் என்ற சைகையால்.
"நிறைய புக்ஸ் கலெக்சன்  இருக்கு இந்த வருஷம்...உங்களுக்கு எந்த ஆர்தரோட புக்ஸ் ரொம்ப பிடிக்கும்?"  என்று இயல்பாக கேட்டான்.
"ஜெப்ரி  ஆர்ச்சர்" என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்தேன்.
"நான் அண்ணாநகர்ல தான் இருக்கேன். நீங்க?" அவன் கேட்டதுக்கு
"திநகர்..வெங்கட்நாராயனா ரோடு" என்றேன்.
"ஓ.. திநகர்...ரொம்ப  நல்ல ஏறியா வாச்சே" என்றாவறே பேசிக்கொண்டு வெளியில் வந்தோம்.

வாசலில் நின்றுகொண்டிருந்தோம், கிளம்புவதற்கு தயாராக..
அவனுக்கு  பேச்சு வரவில்லை.."ம்ம்..ம்ம்..வந்து..வந்து..உங்க போன் நம்பர் குடுக்க முடியுமா, உங்களுக்கு பிடிச்ச ஆர்தரோட  புக் எங்கயாவது பார்த்தேன்னா சொல்றேன்".  நானும் கொடுத்தேன்.
"உங்க நம்பர்க்கு  மிஸ்டு  கால் கொடுக்கிறேன்"...என்று நாசுக்காக அவனோட நம்பரை கொடுத்தான்.."பை"  சொல்லிக்  கொண்டு பிரிந்தோம்.

ஆட்டோவில் செல்லும்போது முழுவதும்...அவனோட நினைப்பு தான். அவனோட பார்வை...அவனோட சிரிப்பு ..அப்படியே என்னை முழுசா ஆக்கிரமிச்சிக்கிட்ட மாதிரி ஒரு உணர்வு. வயிற்றுக்குள் ஏதோ பூதம் புகுந்து புரண்டி எடுக்கிறது போல் உணர்வு..

வீடு செல்வதற்குள் ஒரு sms "ஹாய்" என்று...அதை பார்த்தவுடன் மனம் துள்ளி குதித்தது ..ஆட்டோவை நிறுத்த சொல்லி ...கீழே இறங்கி ஒரு குட்டி ஆட்டம் போட்டேன். ரோட்டில் ......
ரிப்ளை அனுப்பினேன் அதே "ஹாய்". அதற்கு பின் ஏதும் வரவில்லை அவனிடம் இருந்து. ஆயிரம் முறை பார்த்திருப்பேன்...மெசேஜ் ஏதாச்சும் வந்திருக்கிறதா என்று.

அன்று இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை..புரண்டு புரண்டு படுத்தாலும் தூக்கம் வரவில்லை..பைத்தியம் பிடித்தார் போல் இருந்தது....என்றும் இல்லாத ஒரு  உணர்வு ... எத்தனை சுகம் இந்த காதல் வலி என்பது அன்றுதான் உணர்ந்தேன்.

"காதலை தேடி போக கூடாது, அது  நிலைக்காது, அதுவா  நடக்கணும், உன்ன  போட்டு  தாக்கனும், தல கிழா போட்டு  திருப்பனும்." என்ற விண்ணைத்தாண்டி வருவாயா சிம்புவின் டயலாக் தான் ஞாபகம் வருகிறது.
இரவு முழுவதும் தூங்காமல், போர்வைக்குள் சுருண்டு கிடக்கிறேன்....காலை மணி 8. sms வருகிறது "ஹாய் குட்மோர்னிங் "  என்று அவனிடம் இருந்து. பார்த்ததும் அப்படி ஒரு ஆனந்தம்.. ஆகாயத்தில் பறப்பதை போல. புன்னகையுடன் "ஹாய் குட்மோர்னிங்"  என்று நானும் ரிப்ளை அனுப்பினேன்..
சந்தோசத்துடன் விடிந்த காலையது சங்கடமேதுமில்லாமல் நகர்கிறது.
"ப்ரேக்பாஸ்ட் சாபிட்டாச்சா" என்ற அடுத்த sms வருகிறது சற்று நேரம் கழித்து....இப்படியே ஒரு மணி நேரம் sms  வழியாகவே பேசிக்கொள்ளும்போது ஒரு sms "நான் ஒன்னு சொன்னா தப்பா எடுத்துக்க  மாட்டீங்களே ?" என்று....
"மாட்டேன் " என்றேன் ..
"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" அடுத்த sms ..
ஆஹா ....என்று எழுந்து திரும்பவும் குட்டி  ஆட்டம்   போட்டேன்.  அடக்கி கொள்ள  முடியவில்லை அந்த சந்தோசத்தை ...உண்மையில் சொல்லப் போனால் காதல் என்னும் அந்த காந்தம் நம்மை பற்றிக் கொள்ளும் போது நாம் நாமாகவே இருப்பதில்லை.
சில நொடிகள் கழித்து அடுத்த sms அவனிடமிருந்து "சாரிங்க...நான் ஏதாவது தப்பா சொல்லி இருந்தா"....
"ச்ச்சே  ச்ச்சே அப்படி எல்லாம்  ஒன்றும இல்லை" என்றேன்..
கட்டில் மேல் விழுந்து புரண்டு... தலகாணி  நடுவில் முகத்தை புதைத்து சிரித்துகொள்கிறேன்.
என் உதட்டின்  ஓரம் எப்போதும் ஒரு புன்னகை மின்னிக்கொண்டே இருக்கிறது. வெட்கத்தை மறைக்க நினைத்தாலும் முடியாமல் தவிக்கிறேன். கண்ணாடியை ஆயிரம் முறை பார்த்து அசடு வழிகிறேன்..காதல் எத்தனை சுகமானது. ஒவ்வொருவரும் கட்டாயம் கடந்து வர வேண்டிய சிலிர்க்க வைக்கும் வசந்த காலம் அது.

பெருமூச்சுடன் சொல்லி முடித்தாள் சித்ரா தன் தோழி அனுவிடம்...."இப்படி எல்லாம் எனக்கு நடந்து, என்னோட இந்த காதல் சுகத்தையும், காதல் வலியையும் உன்னிடம் சொல்லணும்னு  ரொம்ப  ஆசையடி  எனக்கு".
"ஏய்...என்னடி சொல்ற...உனக்கு கல்யாணம் ஆயிடுச்சு மறந்துடாத..குழைந்தை கூட  இருக்கு..என்ன பேசற நீ..? " என கடித்து  கொண்டாள் அனு, சித்ராவை பார்த்து.

சித்ரா தன் தோழி கேட்ட கேள்விக்கு..
"நிச்சயித்த திருமணம்.. நல்ல பையனா, குடும்பத்துக்கு ஏத்தவரான்னு  பார்த்து அம்மா அப்பா கல்யாணம் செய்து வைக்கிறாங்க. பிரச்சனை என்னன்னா யாரையும் பார்த்தவுடனே இந்த காதல் உணர்வு , ஈர்ப்பு ஏற்படறது  இல்லை. சில பேருக்குதான் அந்த மாதிரி அதிர்ஷடவசமா அமையுது. சொன்னாலும் அம்மா அப்பா கேட்க்கிறது இல்லை. கல்யாணம் ஆனா எல்லாம் சரி ஆயிடும்'ன்னு சொல்லி கட்டிவச்சுடுறாங்க. கல்யாணம் ஆயிடுச்சு, புருஷன் தான் எல்லாம்ன்னு திருப்திபடுத்திகிட்டு வாழ்ந்துடறாங்க.
நான் சொன்ன இந்த காதல் வலி, சுகம், ஈர்ப்பு, தன்னிலை அறியாத ஒரு  உணர்வு..இது எல்லாம் சினிமால தான் நடக்கும்...நிஜ  வாழ்க்கைல நடக்காதுன்னு நிறைய பேரு நினச்சுகிட்டு  இருக்காங்க....அப்படி எல்லாம் இல்லை. நம்ம மனசுக்கு பிடிச்சவன பார்த்தவுடனே இது எல்லாம் கண்டிப்பா நடக்கும்.

என்னோட வாழக்கை புத்தகத்துல காதல் என்ற பக்கம் மட்டும்
நிரப்பபடாமலே  இருக்கு...அதை நிரப்பாமல் வைத்திருக்க நான் விரும்ப வில்லை. அந்த அனுபவங்களை அனுபவிக்காமல் வாழ்க்கையை முடித்துக்கொள்ளவும் ஆசை இல்லை....." என்று சொல்லி முடித்தாள்.

அனு திடுக்கிட்டு பார்க்கிறாள் சித்ராவை...ஏதும் பேசாமல் அப்படியே  விசித்திரமாக பார்துகொண்டிருக்கிறாள்...

சித்ரா, தன் தோழி அனுவின் பக்கத்தில் சென்று...அவளுடைய கையை  பிடித்து கொண்டு "அனு..ஆயிரம் கேள்விகள் உன் மனசுக்குள் ஓடிக்கொண்டு இருப்பதை என்னால் உணர முடிகிறது ..அத்தனை கேள்விகளுக்கும் பதில்...என்னிடமும் இல்லை...." என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் சித்ரா.

Tuesday, March 2, 2010

தொலைத்து கொண்டிருக்கின்றோம் !

வழக்கம் போல் இல்லாமல் சற்று சீக்கரமாகவே  கிளம்பினேன் அலுவலகத்தில் இருந்து. பேருந்து நிலையத்தில்  D 70 பேருந்திற்காக காத்திருந்தேன்,  முதலில் ஒரு பேருந்து வந்தது , சீட் ஏதும்  காலி இல்லாத காரணத்தால் நான் ஏறவில்லை. அப்படியே இரண்டு பேருந்துகளை விட்டுவிட்டேன். பத்து நிமிடங்கள் கழித்து அடுத்த பேருந்து வந்தது.சற்று காலியாக இருந்ததால் ஏறினேன், நல்ல வேளையாக அமருவதற்கு இடமும் கிடைத்தது பேருந்தின் கடைசிக்கு  முந்தைய சீட்டில்.

அடுத்த நிலையத்தில் வயதான பாட்டி ஒருவர் முன்புறமாக ஏறினார். அவரை பார்த்தவுடன்  முன்பு அமர்ந்திருக்கும்  யாரேனும் கட்டாயம் இடம் கொடுப்பார்கள் என்று நினைத்தேன். 3 நிமிடங்கள் கழிந்தன யாரும் தன் இடத்தில இருந்து எழுந்து அந்த வயதான பாட்டிக்கு இடம் கொடுக்க வில்லை. நான் எழுந்து போய் அவர்களை அழைத்து வந்து என் இடத்தில அமரவைத்தேன்.

அந்த பாட்டி என்னை ஒரு நிமிடம் கண் சிமிட்டாமல் மேலும் கீழுமாய் பார்த்தார். அவர் பார்த்த பார்வைக்கு அர்த்தம் முழுதாக தெரியா விட்டாலும் நான் யூகித்த இரண்டு விஷயங்கள்..

ஒன்று, ஜீன்ஸ் போட்டுருந்தாலும் இந்த பொண்ணு  நமக்கு சீட்டு  குடுத்திருக்குன்னா நல்ல பொண்ணுதான்..

இரண்டு,  இந்த காலத்துல யாரு நம்மள மாதிரி வயசானவங்கள பாத்து எழுந்து சீட்டு குடுக்குறாங்க, காலம் மாறி போச்சு ...அது எல்லாம் அந்த காலம் வயசானவங்கள பாத்தவுடனே அனுதாபப்படறதும் மரியாதை குடுக்கறதும்...
பரவால்லையே இப்படி பட்டவங்க  இருக்காங்கன்னா ஆச்சர்யமா தான்  இருக்கு.... 

மறுபக்கம், கடைசி சீட்டில் அமர்ந்திருந்த நான் எழுந்து போய் அந்த பாட்டியை அழைத்து வந்து என் சீட்டில் அமர வைத்தது, அந்த  பேருந்தில் பயணித்த அனைவருக்கும் சற்று ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் இருந்தது.  முன் சீட்டில் அமர்ந்திருந்த ஒரு சிலர் என்னை சில நொடிகள் வெறித்து பார்த்தனர் ஒரு குற்ற உணர்ச்சியோடு ...

 இதை எல்லாம் என்னை பெருமைப்  படுத்திக்கொள்வதற்காக  சொல்லவில்லை, சற்று யோசித்து பாருங்கள் எங்கே போனது நமது பண்பு....கொஞ்சம் கொஞ்சமாக நமது கலாச்சாரம் எங்கேயோ தொலைந்து கொண்டிருக்கின்றது என்பதை நான் உணர்ந்தேன்.

விஷயம் சிறிதாயினும் அதனுடைய தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கின்றது என்னுள்..

Monday, March 1, 2010

யார் நீ...?

யார் நீ...?

நம்மை அறிமுகபடுத்தியது என்ன உறவு?
காதலா. .. ஈர்ப்பா....?
யோசித்தாலும் பதில் தெரியவில்லை..
நீயும் யோசிக்க ஆரம்பித்து விட்டாயா?..
அறிமுகப்படுத்திய உறவு
எதுவாக இருப்பினும்
இன்று வரை தொடர வைப்பது
என்ன உறவு?

உறவை பற்றிய யோசனை ஒரு புறம் இருக்க..
உன்னை பற்றியும் சில வரிகள்..

உன்னிடம் பிடித்தது
உன்
நேர்மை..
உழைப்பு..
புத்திசாலித்தனம்..
தேடலில் இருக்கின்ற ஆர்வம்..
உன் அன்றாட நிகழ் கால இறந்த கால
நிகழ்வுகளை என்னிடம் சொல்வது..
...தினமும் நலம் விசாரிப்பதில் ஆரம்பித்து..
அப்படியே அலசல் தொடர்கிறது..
அவ்வப்போது "நீங்க ரொம்ப ஸ்மார்ட்டா இருக்கீங்களே"
என்று குறும்பாக நான் நக்கல் அடிக்க ..
பெருமையில் நீ ஆழ்ந்து போக..
ஜோக் அடிச்சேன் என்று சொல்லி சிரிக்க..
ஏய் அடி வாங்குவ என்கிறாய் நீ..
ஏனோ சந்தோசத்தில் மிதக்கிறது மனம் ..
ஆனால் இது காதல் இல்லை!

இப்படியே நாட்கள் கடக்க
ஒரு நாள்..
என்னை அசர வைத்த சம்பவம் அது..
முத்தமிட்ட இதழ்கள்..
அள்ளி அனைத்த கைகள்...
என்னிடம் சிலுமிஷம் செய்து
செல்லமாக குத்தும்
உன் மீசை...
இப்போது நினைத்தாலும் மெய் சிலிர்கிறது.
என்னையும் அறியாமல்
உன்பால் என்னை ஈர்த்தது
உண்மை.
ஆனால் இது காதல் இல்லை!

மனம் சொல்கிறது
இது
கலாசார முரண்பாடு...
எனினும்
மரபுகளை முறித்துக்கொண்டு...
யதார்த்தமாக இருக்க சொல்கிறது
எனது சுயம்!

இவை அத்தனையும் கடந்து..
இருவரும் வெவ்வேறு திசையில்
பயணிக்கிறோம்..
வாழ்க்கை இயல்பு !

இது வரை நீ படித்தது போதும்.

இப்பொழுது சொல்..

எனக்கு நீ என்ன உறவு?

மொக்கை கவிதைகள்..

மொக்கை கவிதைகள்..
---------------------------------------
1 . என்னுடைய முகப்பருவை பார்த்து "அழகா இருக்கே" என்று சொல்லி நக்கல் அடித்த என்னுடைய நண்பருக்காக எழுதியது இந்த கவிதை..

முகப்பரு
நண்பா …
அழகென்று  ரசித்ததும்  இல்லை …
அசிங்கமென்று  வருந்தியதும்  இல்லை ..

எத்தனை  விசித்ரமானது  இந்த  முகப்பரு ..
என்  முகத்தையும்  அழகாக்கி  விட்டதே !
எத்தனை  முறை  வந்து  சென்றிருக்கும்  …
அப்போது  ரசிக்காத  எனக்கு 

இப்போது  ரசிக  தோன்றியதே  …

எதற்காக ?

முகப்பருவும்  அழகு  என்று  …
அறிய  வைத்தவன்   நீ  தானே !


 =======================================

2 .என்னுடன் வேலை செய்யும் தோழி சுஜாதா ஒரு நாள் ஏதோ ஒரு சின்ன விஷயத்துக்காக கோபித்து கொண்ட போது எழுதிய கவிதை இது..

சுஜாதா’வின்  மௌனம் :
 அளவில்லாமல்   நீ  பேசியதை  ரசித்த  எனக்கு 
 உன்னுடைய  மௌனத்தை  ரசிக்க  முடிய  வில்லை ..

ஏனடி ,

ஏன்  இந்த  மௌனம் ..?
என்ன  பெரிதாய்  சாதித்திருகிறது  உன்  மௌனம் ?

உண்மையோ  !
பொய்யோ  !
ரசிப்பேன்
நீ  பேசினால் ..............

நட்பு
அறிமுகம்  இல்லாமல்  வந்தோம் …
அடிகடி  சந்தித்து  கொண்டோம் …
உறவுகளுக்கு  மேலே  உயிர்  ஆனோம்  
காலங்கள்  கடந்து  சென்றாலும் 
கடைசிவரை  தொடர  வேண்டும் 
நம்  நட்பு …

======================================
3 . அருள்சிங்க் வேலையை விட்டு சென்ற போது எழுதியது..

பிரியா  விடை …
எங்கிருந்தோ  வந்தோம் ...
எப்படியோ  சந்திதோம் …
தலைஎழுத்து என்று  எண்ணிக்கொண்டே ...
நண்பர்களாக  ஆனோம் ..
அடிகடி  சந்தித்து  கொண்டோம் …
வேலையை  தவிர  மற்ற 
தேவைற்ற  வேலைகளை செய்தோம் ..
மற்றவர்களை  கலாய்த்து  கொண்டே  காலங்கள்  கழித்தோம் ..
பிரியும்  நேரம்  வந்துவிட்டது ...
பிரிய  மனம்  இல்லை ..
காலங்கள்  கடந்து  சென்றாலும் 
கடைசிவரை  தொடர  வேண்டும் 
நம்  நட்பு …

கதை கேளு.. கதை கேளு!

நேத்துல இருந்து  ஒரே வயிறு வலி...ஒரு வேல நேத்து சிக்கன் நாலு பீஸ் அதிகமா சாப்டோமே அதனால இருக்குமோ..இல்ல ஆபீஸ்ல சிக்கன் ப்ரயிட் ரைஸ் சாப்டோமே அதனால இருக்குமோன்னு...யோசிச்சுக்கிட்டு  தொலைகாட்சியில  "சமையல் சமையல்" நிகழ்ச்சி பாத்துட்டு இருந்த நேரம்.. என் அக்கா (என்னுடைய நாத்தனாரை அக்கா என்று அழைப்பேன்.  சனிக்கிழமை பள்ளி விடுமுறை, அதனால பசங்கள கூட்டிகிட்டு வந்திருந்தாங்க.)  டப்புன்னு  தலைல ஒரு தட்டு தட்டி என்னமா  எவளோ நேரமா கூப்பிடறேன்...காது கேக்கலையா? என்றார்.

 ...ஒரு ரெண்டு நாள் நிம்மதியா இருக்கலாம்ன்னு இங்க வந்தா தொல்லையா இருக்கே..."

செல்லம்..(ஓவர் பாசம் வந்தா அப்படி தான் கூப்பிடுவாங்க) கிச்சன்ல நிறைய வேலை இருக்குடா. இந்த இரண்டு வாண்டுகளும் தூங்க மாட்டேங்குது....நீ தான் ஏதேதோ எழுதுவியாம்ல! அப்படியே இரண்டு பேரையும் எதுனா கதை சொல்லி தூங்க வை பார்ப்போம்..

என்றபடி பதிலுக்கு என் பதிலைக் கூற பெறாமல் இரண்டு பசங்களையும் "அத்தை எதுனா கதை சொல்லுவாங்க . அப்படியே தூங்கிடனும். சரியா" என்றபடி கிச்சன்னுக்குள்  சென்றுவிட்டார்.

இப்போதானே என்னோட வாண்டுகள கஷ்டப்பட்டு தூங்க வச்சேன்...மறுபடியுமா கஷ்ட காலம்'ன்னு மோனங்கிகிட்டே...
என்ன கதை சொல்வது?? நான் கதை எழுதுவேன் என்று யார் புரளியை கிளப்பியது? ..நானே பெருமைக்கு எப்போவாச்சும் பில்ட் அப் குடுத்திருப்பேன் போல..ம்ம் .. யோசிச்சிட்டே இருந்த என்னை..
கத சொல்லுங்க அத்தை என்றான் பவிக்...

மனதை தேத்திக் கொண்டு.. என்னுடைய வலையில் எழுதுவதற்காக  ஒரு சிறுகதை ஒன்றை கற்பனை செய்து வைத்திருந்தேன்...அந்த கதையைச் சொல்லி வாண்டுகளின் கருத்தை வாங்குவது என்று முடிவெடுத்தேன்.

ஆரம்பித்தேன்..

"ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தானாம்.. 
ரெண்டு பேரும் என்னை மொரைகிறாங்க....

பவிக்: போங்க அத்தை கதை ரொம்ப பழசு ...

"சரி சரி...ஒரு ஊர்ல நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி  இருந்தாராம் . 
விஷால்: ரஜினி வேணாம் அத்தை சூர்யா....

சரி...சூர்யா இருந்தானாம்...அவனோட தோட்டத்துல மாம்பழ செடி வச்சானாம், செடி மரமாச்சாம்....ஆனா ஒரு மாங்காய் கூட வந்ததே இல்லையாம்.

பவிக்: தண்ணி ஊத்தலியா அத்தை?

"சொல்றது மட்டும் கேளு. குறுக்கால கேள்வி கேட்காத சரியா"

விஷால்: "சரி நீங்க சொல்லுங்க அத்தை " 

சூர்யா ஒரு நாளு தோட்டத்துக்கு போனானாம்...போனவனுக்கு பயங்கர அதிர்ச்சி..

பவிக்: "பூதம் வந்துச்சா அத்தை "

"இங்கபாரு..இப்படியெல்லாம் கூடால பேசுனா அத்தைக்கு மறந்து போயிடும் அப்புறம் கதை கிடைக்காது. சொல்லிட்டேன்"

"ஓய்ய்" கிச்சனிலிருந்து அக்கா குரல்....

"விடமாட்டாங்களே...சரி..

அவனோட மாம்பழ மரத்துல நிறைய மாம்பழம் இருந்துச்சாம்.ஆனா அவன் ஒ
ரு பழங்ககூட சாப்பிடல.

பவிக்: "ஏன் அத்தை அவனுக்கு எட்டலியா?

"ஸ்ஸ்ஸ்ப்பா"

பவிக்: "சரி சொல்லுங்க. நான் இனிமே பேசமாட்டேன்" 

"அப்புறமா ரொம்ப நேரம் கழிச்சு ஒரு பழம் பரிச்சு சாப்பிட்டு பாத்தானாம், பழம் சூப்பரா இருந்துச்சாம்"

பவிக்: "சூப்பரான்னா?"

"நல்லா ஸ்வீட்டா இருந்துச்சாம். அவனுக்கு ஒரே சந்தோசமாம். ஊர்ல எல்லோரும் அவன் மரத்துல பழம் பறிக்க ஆரம்பிச்சாங்களாம்.  எல்லாரும் பழம் பரிச்சுடுராங்கலேன்னு நெனச்சு அவனோட மரத்தை சுத்தி வேளி போட்டு வச்சானாம். அப்படி இருக்கும் போது ஒரு நாள்.."

விஷால்: "ஒரு நாளு..."

"ஒரு நாள் காலையில அவன் எழுந்திருச்சு பார்த்தா வேளி எல்லாம் உடைஞ்சு போயிருக்குதாம். சரின்னு மறுபடியும்  வேளியை  சரி பண்ணிட்டு அன்னைக்கு போய் படுத்து தூங்கினானாம். திரும்ப காலையில வந்தப்ப வேளி உடைஞ்சு கிடக்குதாம்."

பவிக்: "ஏன் அத்தை உடைஞ்சு போச்சு?" 

விஷால் : "ஏய் அது ஸ்டாராங்கா இல்லடா . இல்ல அத்தை?"

"அதான் சொல்றேன்ல அதுக்குள்ள என்ன அவசரம்?.

ஊர்ல எல்லார்கிட்டேயும் பயங்கரமா கோவப்பட்டானாம். எல்லோரும் எங்களுக்கு தெரியாதுன்னு சொல்லிட்டாங்களாம். சரின்னு அன்னைக்கு
வேளியை சரி செஞ்சுட்டு.. .."

விஷால் : "காலையில பார்த்தா வேளி உடைஞ்சு கிடக்குதாம்" 

"டேய் அதிகபிரசங்கிதனமா பேசாதே. அதான் அத்தை சொல்றேன்ல.....

அன்னைக்கு வேளியை சரி பண்ணிகிட்டு ராத்திரி அங்கேயே வெயிட் பண்ணி யார் இந்த மாதிரி செய்யுறான்னு பார்த்தானாம். சரியா பன்னெண்டு மணிக்கு "திபு திபு திபு திபு"ன்னு நிலாலருந்து ஒரு பெரிய யானை இறங்கி ஓடி வந்துச்சாம். "

பவிக் : "பெரிய யானையா அத்தை" 

"ஆமாண்டா செல்லம். ரொம்ம்ம்ம்ப  பெருசாம். அதோட வாலு  ரொம்ம்ப பெருசா இருந்துச்சாம்."

விஷால்: "டேய் பவிக் இவ்ளோ பெருசா இருக்கும்டா" கையை முடிந்த மட்டும் விரிக்கிறான் விஷால்.

பவிக்: "இல்லடா அது நம்ம ஸ்கூல் விட பெருசா இருக்கும் தெரியுமா"

"அத்தை இங்க பாருங்க அத்தை  ஸ்கூல் விட பெருசா எங்கன்னா யானை  இருக்குமா?ஹ..ஹ. அப்படின்னா அது டைனோஸர்" சிரிக்கிறான் விஷால்.

விஷால் : "அத்தை நேத்து டிவி'ல டைனோஸர் படம் போட்டான். அதுல ஒரு.."

"டாய் அத்தை கதை சொல்லிட்டுருக்கேன்ல. அத கவனிங்கடா அப்புறம் பேசலாம்.
அந்த யானை வேளியை உடைச்சு வந்து மாம்பழம் எல்லாத்தையும் சாபட்டுச்சாம்.  

 பவிக் :  கொட்டையோடவா அத்தை ?


ஸ்ப்பா....டேய் கதைய கேளுடா முதல்ல..   
 
அத பார்த்துகிட்டுருந்த அவன் ஓடிப் போய் அந்த வாலை புடிச்சுகிட்டானாம். அந்த யானை நிலாவுக்கு நேரா போச்சாம்"

"செல்லம்... அந்த யானை திரும்பி பாக்கல" குரல் கேட்டு திரும்பினேன். கையில் கரண்டியுடன் அக்கா.

அக்கா: "சீக்கிரம் சொல்லுடா. எனக்கு வேலை இருக்கு"

"உள்ள வேலை இருக்குன்னு இங்க என்ன பண்றீங்க ?"

அக்கா: "அதெல்லாம் உனக்கெதுக்கு நீ கதைய கண்டினியூ பண்ணு" என்றார் அக்கா...

"நிலாவுல இறங்கிப் பார்த்தா நிறைய தங்கம்,வைரம், வைடூரியமெல்லாம் இருந்ததாம்" கண்களையும் நெற்றியையும் சுருக்கி அதன் பிரம்மாண்டத்தை விளக்கினேன்.

பவிக் : "வைடூரியம்ன்னா என்ன அத்தை?" 

"சரி கிண்டர் ஜாய், குர்குரே, டைரி மில்க், லேஸ்ன்னு வச்சுக்கோ...நிறைய இருந்துதாம் எல்லாத்தையும் கைநிறைய அள்ளிகிட்டு மறுநாள் நைட்டு அங்கிருந்து யானை கிளம்பும் போது திரும்பி வந்தானாம்.

ஆனா அன்னைக்கு இவனை காணாம அவன் பொண்டாட்டி ஜோதிகா  ரொம்ப கவலைப்பட்டாளாம். ஊர்ல யார கேட்டாலும் ஒன்னும் தெரியலையாம். அப்புறம் அவன் வந்ததும் ரொம்ப சந்தோஷப்பட்டாளாம். கொண்டு வந்த தங்கத்தையெல்லாம் அவளுக்கு கொடுத்தானாம். பொண்ணுக்கு கிண்டர் ஜாய்யும்
  ,குர்குரேயும், லேஸூம் கொடுத்தானாம்.

எப்படி கிடைச்சுதுன்னு கேட்டதுக்கு நைட்டு நடந்த விசயத்த சொன்னானாம். இத யார்கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சொன்னான். அவுங்களும் சரின்னு தலையாட்டினாங்களாம் . சரி ஏதாவது உங்களுக்கு புரியுதா?"
"ம்ம் புரியுது அத்தை" கோரஸ்...

"ஜோதிகாவும் , அவங்க பொண்ணு தியாவும் நிலாவுக்கு போகனும்னு ரொம்ப அடம் பிடிச்சாங்க. சரி சரி இன்னைக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னான் சூர்யா. அப்புறம் ஜோதிகா தண்ணியெடுக்க வந்த அவளோட ஃப்ரெண்டு, எங்கடி போனான் உன் புருஷன்னு கேட்க.. இவளும் யார்கிட்டயும் சொல்லாதேன்னு உண்மைய சொல்லிட்டா. இது கொஞ்சம் கொஞ்சமா ஊர் ஃபுல்லா பரவிடுச்சு"

அக்கா: "அய்யய்யோ..."

"என்ன அய்யய்யோ......உள்ள போயி வேலைய பாருங்க" என்றேன். நகருவது போல் நகர்ந்து பின்னாலேயே இருந்தார்.

"மறுநாள் சூர்யா.. பொண்டாட்டி ஜோதிகாவுடனும்  பொண்ணு தியாவுடனும்  பெரிய பெரிய பையோட காத்திருந்தானாம். அவனுக்கு தெரியாம இன்னொருத்தரும், அவுங்களுக்கு தெரியாம இன்னொருத்தரும்னு ஊரே ஒருத்தருக்கு ஒருத்தர் தெரியாம வெயிட் பண்ணிட்டுருந்தாங்களாம். அப்ப அந்த யானை "திபு திபு திபு திபு"னு ஓடி வந்ததாம். இவன் ஓடிப் போய் யானையோட வாலை பிடிக்க,அவன் கால அவனோட பொண்ணு  புடிக்க, அவளோட பொண்ணு கால அவளோட அம்மா புடிக்க , அவங்களோட கால இன்னொரு புள்ள புடிக்க, அவன் கால அவுங்கம்மா பிடிக்க...இப்படியே ஒருத்தர் கால ஒருத்தர் புடிச்சுகிட்டு ஊரே மேல போச்சாம்"

பவிக்: "காலு வலிக்காதா அத்தை ?"

"வலிக்கும் தான். ஆனா ஆசை யார விட்டது. அப்படியே போனாங்களா.....

"அப்ப அவனோட பொண்ணு தியா  "அப்பா நிலா ரொம்ப சூடா இருக்குமாப்பான்னு" கேட்டாளா , அதுக்கு  "இல்லடா ஸ்வீடி ரொம்ப ஜில்லுன்னு இருக்கும்னு" அப்பங்காரன் சொன்னான். நிலா எவ்ளோ பெரிசா இருக்கும்ப்பான்னு கேட்டா அவனோட பொண்ணு . அப்பங்காரன் இரண்டு கையும் விரிச்சு இவ்ளோஓஓஓஒ பெரிசா இருக்கும்னான். அவ்வளவு தான்.......எல்லாரும் செத்து போய்டாங்க"

பவிக் : "எப்படி அத்தை செத்து போனாங்க"

"அதான் டா யானை வால்ல இருந்து கைய எடுத்தவுடனே அவனும், எல்லாரும் கீழ விழுந்திடுவாங்கல்ல...அதான் செத்து போய்டாங்க"

விஷால்: "அப்புறம் என்னாச்சு அத்தை " 

"அதான் செத்து போய்டாங்களே அப்புறம் என்னாகும் கதை முடிஞ்சுது"

ம்ம்ம்ம் என்றபடியே இரண்டு பேரும் என்னையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

அக்கா: ஏய்ய்ய்... எழுந்திருங்க உங்க அத்தைக்கு தான் எந்த வேலவெட்டியும்  இல்லை.. ஏதோ ஒலரிக்கிட்டு  இருகாங்கன்னா நீங்களும் உட்கார்ந்து கேட்டுகிட்டு, எழுந்திரிங்கடா  போய் கண்ண மூடி படுங்க போங்க  கண்ண தொறந்தீங்க வெங்காயத்தை தட்டி கண்ல போடுவேன்.

அவர்களும் அந்த அதட்டலில் தூங்கிவிட்டனர்...

நம்ம கதை அவ்வளவு மோசமாவா இருக்கு???.......அவ்வ்வ்வ்வ்வ்....டோடல் டாமேஜ்!!!!

(நண்பர் ஒருவரின் வலைப்பதிவு படித்து அந்த ஸ்டைலில் நான் முயற்சி செய்தது)