Thursday, June 17, 2010

நீ எல்லாம் ஒரு பெரிய மனுஷனா ?

என்னோட நண்பர் ஒருத்தர் இன்னைக்கு சாட்ல வந்து "பதிவு போட்டு ரொம்ப நாளாச்சு போல. இப்படியே போனா பதிவுலகத்துல எல்லோரும் உங்கள மறந்துடுவாங்க"ன்னு குண்டு தூக்கி போட்டு போய்ட்டாரு. அவரு பிரபல பதிவர் வேற..பழம் தின்னு கொட்டைய போட்டவரு சொன்னா உண்மையாதான் இருக்கும். அப்போவே ஆரம்பம் ஆயிடுச்சு பதிவு போடணும்ன்ற டென்ஷன்.


எப்படி தான் தினம் ஒரு பதிவு, வாரத்துல மூணு நாலுன்னு சர்வ சாதாரணமா போடறாங்களோ தெரியல. சீனியர்  பதிவர்கள் கேட்டு தெரிஞ்சுக்கலாம்ன்னு  கேட்டேன். உட்காந்து  யோசிப்போமில்ல'ன்னு ஒருத்தர், குந்திக்கினு யோசிப்போமிலன்னு ஒருத்தர்  (உக்காந்து யோசிக்கிறதும் குந்திக்கினு யோசிக்கறதும் ஒன்னுதானே ன்னு கேக்குற ரகமா இருந்தா இப்படியே எஸ் ஆயிக்கலாம்..உங்க அறிவுக்கு ஏத்த இடம்  இது இல்லை) ரூம் போட்டு யோசிப்போன்னு இன்னொருத்தர், மொட்டைமாடில மல்லாக்கு படுத்து வானம் பார்த்து யோசிப்போம்ன்னு ஒருத்தர், குப்புற படுத்திக்கிட்டு யோசிப்போம்னு சிலர்....ஹ்ம்ம் இன்னும் சில ரகளையான பதில்கள் வந்துது அது எல்லாம் இங்க போட முடியாதுங்கறதால போடல.  

பதிவர்களே என்னோட கேள்வி எல்லாம் இது தான். ஏனுங்க புதுசா வந்தவங்க எங்களுக்கு யோசிக்கறதுக்கு ஒரு பொசிஷன் கூட விட்டு வைக்கலியே நாங்க எல்லாம் எப்படி யோசிக்கறது எப்படி பதிவு போடறது. இதை எல்லாம் கேட்டு  எனக்கு பதிவு என்ன எழுதணும்ன்னு யோசனை போய் நாம எந்த பொசிஷன்ல யோசிக்கனும்ன்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டேன். பரிட்சையில கூட இவளோ டென்சன் ஆனது இல்ல...ஏகப்பட்ட டென்சன் ஒரு பதிவு போடறதுக்குள்ள. பரிட்சையிலயாவது  காப்பி  அடிச்சு பாஸ் பண்ணிடலாம் ஆனா  இங்க காப்பி  அடிச்சா காப்பிரைட்  பிரச்சனை பண்றாங்க.

பதிவுலகத்தையே அலசி ஆராய்ஞ்சதுல ஒரு பொசிஷன்  கிடைச்சது. இதுக்கும் ஏகப்பட்ட டிமாண்டுன்னு கேள்விப்பட்டு  விட கூடாதுன்னு ஏகப்பட்ட ரெகமென்டேசன்ல வாங்கீருக்கேன்.



சும்மா சொல்லகூடாது இந்த பொசிஷன்ல யோசிக்கும்போது மண்டைக்குள் ரத்த ஓட்டம் அதிகரித்து அறிவு கண்ணு தானா திறக்குது. அப்படியே சிந்தனைகள் அருவியா ஊத்துது. இப்படி தான் நேத்து யோசிக்கும்போது ஒரு டவுட் வந்துது. அதை  நான் முகபுத்தகத்திலும் (facebook)   ஆர்குட்லயும் (orkut)  போட்டேன்.

"எனக்கு  ஒரு டவுட்... மனிதர்களுக்கு "SHUT UP"  கம்ப்யூட்டர்க்கு ஏன் "SHUT DOWN"? . செய்யபோற வேல ஒன்னுதானே.."

இந்த கேள்விக்கு சில நண்பர்களின் பதில் மிக சுவாரசியமாக இருந்தது.


//ரொம்ப ஜிம்பிள்
மனுசனுக்கு வாய் மேல இருக்கு
அதான் ஷட் அப்


மேசைக் கணினியில் சிபியு மேசைக்குக் கீழ
இருக்கு அங்க குனிஞ்சுதான் ஷட் டவும் செய்யணும்
அதான் ஷட் டவுண். மேதைகளின் மேதை//

இவரு நெசமாலுமே மாமேதை தான். என்னமா பட்டைய கெளப்புறாரு :))

//லேப்டாப் வேலை முடிஞ்சா அதை மூடி வக்கிறோம். அதுனால “DOWN"..
மனுசன் வேலை முடிஞ்சா எந்திருச்சு போய்டுவான். அதுனால “UP"//

மக்கா.. எப்படிதான் இப்புடி எல்லாம் சிந்திக்கிறாங்களோ..

//கம்ப்யூட்டர் வேலை முடிஞ்சா அதுக்கு பீஸ் புடுங்கிடுறோம்... Down
ஆனா நமக்கு வேலை முடிஞ்சதுக்கு அப்புறாம் தான் பல்பே எரியுது Up//

//மனிதர்களை shut up னு சொன்னாத்தான் பேசவே ஆரம்பிப்பாங்க :)
ஆனா கம்ப்யூடர் அபப்டியில்ல ... shut down பண்ணின உடனே அமைதி ஆகிடும் :))//
எப்போவுமே எனக்கு ஒரு கவலை இருந்துட்டே இருக்கும். நம் நாடு  வல்லரசு ஆகுமான்னு. நம்ம ஆளுங்க இப்படி எல்லாம் யோசிக்கறது பார்த்து அந்த கவலை போய்டுச்சு இப்போ.

புனைப்பெயர் தேவை..
எல்லோரும் அவங்களுக்கு ஒரு புனை பெயர் வச்சுக்கிட்டு தான் பதிவு எழுதறாங்க. நாமளும் ஏன் ஒரு புனைவு பெயர் வச்சுக்க கூடாதுன்னு யோசிச்சு சில புனைபெயர்கள் தேர்வு செய்திருக்கேன்.
கருவாச்சி காவியம், கருத்து கருத்தம்மா, கருத்தம்மா கருத்துக்கள் etc etc . உங்களுக்கு ஏதேனும் புனை பெயர் தோன்றினால் சொல்லுங்க.
(இதை படிச்சிட்டு, "நீங்க கருப்பா இருப்பீங்களா?" ன்னு கேட்டு பின்னூட்டம் போடறவங்க, ஒரு வருசத்துக்கான fair & lovely எனக்கு குரியரில் அனுப்பி வைக்கணும் சொல்லிட்டேன்.)

சும்மா சொல்றேன் தெரிஞ்சுக்குங்க...
நாணயத்தை சுண்டிப்போடற பழக்கத்தை ஏற்படுத்தியவரு யாருன்னு கேட்டா உடனே சூப்பர் ஸ்டாருன்னு சொல்றாங்க..ஏன்னு கேட்டா அவருதான் "சிவாஜி" படத்துல படு ஜோரா பூவா தலையா சுண்டி போடுவாறாம். குழப்பம் வரும் போது நாணயத்தை சுண்டிப்போட்டு பூவா,தலையா பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தியவர் உளவியல் அறிஞரான சிக்மன்ட் பிராயிட்.

என்னா நக்கலுஒரு நிமிட கதை...
என் நண்பன் சக்தி BSC (Electronics) படிச்சு முடிச்சிட்டு வேலை வெட்டி இல்லாம சுத்திக்கிட்டு இருந்தான். ஒரு நாள் திடீர்னு NOKIA கம்பெனில இருந்து இண்டர்வீயுக்கு அழைப்பு வந்துது. சக்திக்கு பயங்கர சந்தோசம். அடுத்த நாளே  இண்டர்வீயுக்கு வர சொன்னாங்க. மறுநாள் காலைல சக்தி அதிசயமா சீக்கரம் எழுந்திரிச்சு  நல்ல தோச்சு இஸ்திரி பண்ணின டிரஸ் போட்டுக்கிட்டு கிளம்பினான்.
கம்பெனிக்கு போனவுடனே 10 நிமிஷம் வெயிட் பண்ண சொன்னாங்க. 10 நிமிஷம் கழிச்சு இண்டர்வீயு ரூம்ல இருந்து அழைப்பு வரவே அவனும் உள்ளே போனான்.
சக்தி உள்ள நுழைஞ்சதும் அவனோட பைல் கொஞ்ச நேரம் புரட்டி பாத்துட்டு , வழக்கம் போல படிப்பு, குடும்ப பின்னணி, வேலை செய்த முன்னனுபவங்கள் போன்ற  தகவல்கள் எல்லாத்தையும்  கேட்டு அறிந்தார் HR. அவருக்கு சக்தியின் பதில்கள் கொஞ்சம் பிடித்து போகவே அடுத்த கேள்வி கேட்டார்.
''ஏதாவது ஒரு குறிப்பிட்ட டிப்பார்ட்மென்டுல வேலை பாக்கணும்ன்னு விருப்பம் இருக்கா?" 
"எஸ் சார். முடிஞ்சா கம்பெனி CEO இல்லன்னா அட்லீஸ்ட் ஜெனரல் மேனேஜரா  மேனேஜ்மென்ட்ல இருக்க விருப்பம்.."
இதை  கேட்ட  அந்த HR மேனேஜர்க்கு அதிர்ச்சியும் கோபமும் பொங்க.....
''உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கா?'  என்றார்..
சக்தி ஒரு நொடி யோசித்து விட்டு ..
''ஏன் சார்,அது தான் அதற்கான தகுதியா?'' 

நாங்களும் கவிதை எழுதுவோம்ல..
வரம் கேட்டேன் இறைவனிடம்
இரவோடு இரவாக 
என்னை த்ரிஷாவாக
மாற்றிவிட சொல்லி..
மரணம் கூட சுகம் தான்
எப்போது தெரியுமா?
த்ரிஷாவின்  மடியில் உயிர் பிரியும் போது!!!
என்று நீ சொன்ன அந்த
நொடிப்பொழுதில் !

சும்மா சிரிங்க..
மாமியார்: எட்டு வருஷம் கழித்து குழந்தை பெத்துருக்க..அதுவும் பொம்பளைப்பிள்ளை..
மருமகள்: சும்மா கத்தாதீங்க..உங்க பிள்ளையை நம்பி இருந்தா இதுவும் பிறந்திருக்காது..

ஹ ஹி மொக்கை வேணுமா...
நேத்து ராத்திரி டி.வி'ல வானிலை அறிக்கை கேட்டாயா?
நான் கேட்கலை, அவங்கதான் சொன்னாங்க.

என்னடா இது தலைப்புக்கும்  பதிவுக்கும் சம்மந்தமே இல்லையேன்னு கேக்குறீங்களா?. இப்போ இதாங்க பாஷன். அது எல்லாம் ஒத்துக்கப்படாது  பதிவுக்கு பொருதம்மா தான் தலைப்பு வைக்கணும்ன்னு அடம் புடிச்சா. கடைசி வரை படிச்சிட்டு கமெண்ட் போடாமா போறியே நீ எல்லாம் ஒரு பெரிய மனுசனான்னு கேட்ப்பேன். இப்போ  ஒத்துபோகுதுல்ல..