Thursday, February 4, 2010

கால கொடுமை!

காடுகள் அழிந்து
வீடுகள் ஆகின!
ஏரிகள் அழிந்து
பல மாடி கட்டிடங்கள் ஆகின!

குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல்
மேய்வதற்கு புல்லிலாமல்
கட்டிடங்களை வெறிச்சி பார்கின்றன
மாடுகள்!

வெளி நாட்டு மோகம்!



சாக்கடை சுத்தம் செய்பவனின்
மனதில்...
தன மகன் படித்துவிட்டு
வெளிநாட்டில் செட்டில் ஆகணும் என்ற ஆசை.
 

ஊரை அவரு சுத்தம் செய்கிறார்
அவர் மனதில் இருக்கும் சாக்கடையை
யாரு சுத்தம் செய்வது !



Wednesday, February 3, 2010

ஏக்கம்


அம்மா நான்...
இரண்டு குழந்தைகளுக்கு

பள்ளி பருவத்தை தொட்டிருக்கும் மூத்தவன்
மழலை பருவத்தை எட்டி பார்க்கும் இளையவன்...

தூக்கம் முழுதாக கலையவில்லை
அலாரம் எழுப்புகிறது
இயந்திரமாய் பல் துலக்கி
அரைகுறையாய் குளித்து
ஓடுகிறேன் சமையல் அறைக்கு .
பதம்  பார்த்து  சமைக்கிறேன்
மூத்தவனுக்கு பிடித்ததை ...
ஒரு வழியாக சமையல், வீட்டுபாடம் , காலை  உணவு  என்று
அத்தனையும்  முடித்து 

அவசரமாக  அவனை  கிளப்புகிறேன்
பள்ளிக்கு. ..

நானும்  கிளம்பனும் அலுவலகத்திற்கு
அவரசரமாய் திரும்புகையில்
என்னை பார்த்து சிரிக்கிறான்  இளையவன் ..
புதிதாய் பூக்கும் பூவை போல்
அவனது கண்கள் மெல்ல திறக்க …
அவனுக்கே உரிய மழலையில்  ‘அம்மா ’..’அம்மா ’
என்றழைக்க ..
என்னவென்று சொல்வேன் .…அந்த  பேரின்பத்தை..
மனம் துள்ளி குதிக்கிறது ..
மீண்டும் மீண்டும் கேட்கிறேன் 
என்னை அழைக்கச்  சொல்லி ….
மிக்க ஆசை 
அவன் மழலை கேட்க
நேரம் இல்லை
கடிகார முள் 8 தொட்டது
சிறிய முத்தம் மட்டும் 
கொடுத்துவிட்டு  கிளம்பினேன்.  


கொடுத்த முத்தத்தின் ஈரம் 
குறையவே  இல்லை ..
மனசு  முழுக்க  பிஞ்சு  மழலையே 
சுற்றி  கொண்டிருக்க ..
அலுவலகத்தில்  நான் .

நுனி நாக்கு ஆங்கிலம் 
கம்ப்யூட்டர் , டார்கெட் ..
எல்லாமே வசப்பட்டுவிட்டது ..
இந்த அலுவலக வாழ்கையில் ...

இதோ ஆசையோடு எதிர்பார்த்த ..
மாலை நேரம் வருகிறது ..
வீட்டுக்கு கிளம்ப வேண்டும் …
கிளம்பையில் வருகிறது ஒரு ஈமெயில் ..
ப்ரோபோசல் வேண்டுமென்றும் …
மிகவும் அவசரம் என்றும் .

ஒரு வழியாக எல்லாம் முடித்துக்கொண்டு 
வீட்டுக்கு வருகிறேன் ஆர்வத்துடன் ..
மழலை மொழி கேட்டு ரசிப்பதற்கு ..
வருவதற்குள் தூங்கியே விட்டான் ..
பக்கத்தில் படுத்தேன் ..
அவனை தழுவிக்கொண்டே...

என்  கண்களும்  உறங்கின 
வழியும்  கண்ணீரோடு ..
இதயமோ விழித்திருந்தது  ..
ஏக்கத்தில்!